Home செய்திகள் தேசிய செய்திகள் இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: ஏப்ரல் 7-
இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் தேர்​வுக்கு இது​வரை இல்​லாத அளவுக்கு நடப்பு ஆண்​டில் 26 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஹோமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல, ராணுவக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கும் நீட் தேர்வு கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​துகிறது.
அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் மே 3-ம் தேதி பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெற உள்​ளது.
தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடக்​கிறது. துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 16 இடங்​களில் தேர்வு நடை​பெறுகிறது.ஆன்​லைனில் (https://neet.nta.nic.in) இந்த தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த பிப்​.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி முடிவடைந்​தது.
விண்​ணப்​பங்​களை பரிசீலனை செய்​யும் பணி​கள் இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. சில நாட்​களில் ஹால் டிக்​கெட்டை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய தேசிய தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்​களின் எண்​ணிக்கை ஆண்​டு​தோறும் அதி​கரித்து வரு​கிறது. அதன்​படி, 2017-ல் 11.38 லட்​சம் பேர், 2025-ல் 22.76 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர். இது​வரை இல்​லாத அளவுக்கு தற்​போது 26 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.