Home செய்திகள் உலக செய்திகள் ஈரானின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30+ போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈரானின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30+ போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

வாஷிங்டன்: மார்ச் 7-
ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ கமாண்​டர் அட்​மிரல் பிராட் கூபர் , பாதுகாப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் ஆகியோர் புளோரி​டா​வில் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது; ஈரான் கடற்​படையை ஒட்டு மொத்​த​மாக அழிக்​கும் நடவடிக்​கை​யில் அமெரிக்க படைகள் ஈடு​பட்​டுள்​ளன. கடந்த 72 மணி நேரத்​தில், ஈரானின் சுமார் 200 இலக்​கு​கள் மீது அமெரிக்க படைகள் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளன. பூமிக்கு அடி​யில் ஈரான் அமைத்​துள்ள ஏவு​கணை தளங்கள் மீது, அமெரிக்​கா​வின் பி-2 குண்டு வீச்சு விமானங்​கள் 2,000 பவுண்ட் எடை​யுள்ள பல குண்​டு​களை போட்​டுள்​ளன.
ஈரானின்மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்​கப்​பலை நேற்று தகர்த்​தோம். அது தற்​போது எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா – இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 30-க்​கும் மேற்​பட்ட ஈரான் போர்க்​கப்​பல்​கள் மூழ்​கடிக்​கப்​பட்​டுள்​ளன.
கடந்த 72 மணி நேரத்​தில், ஈரானின் சுமார் 200 இலக்​கு​கள் மீது அமெரிக்க படைகள் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளன. பூமிக்கு அடி​யில் ஈரான் அமைத்​துள்ள ஏவு​கணை தளங்கள் மீது, அமெரிக்​கா​வின் பி-2 குண்டு வீச்சு விமானங்​கள் 2,000 பவுண்ட் எடை​யுள்ள பல குண்​டு​களை போட்​டுள்​ளன. இதன் காரண​மாக கடந்த 24 மணி நேரத்​தில் ஈரானின் ஏவுகணைத் தாக்​குதல் 90 சதவீதம் குறைந்துள்​ளது, ட்ரோன் தாக்​குதல் 83 சதவீதம் குறைந்​துள்​ளது. வரும் நாட்களில் ஈரான் மீதான விமான தாக்​குதல் தீவிரமடையும். இவ்​வாறு பிராட் கூபர், பீட் ஹெக்​சேத் ஆகியோர் கூறினர்.
ஈரானில் அமெரிக்க ராணுவ வீரர்களை இறக்​கி​னால் பேரழி​வாக இருக்​கும் என ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி தெரி​வித்​தார். இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகை​யில், ‘‘ஈரானில் ராணுவத்தை இறக்​கு​வது நேரத்​தை வீணடிப்​பது போன்றது’’ என்​றார்​.