
டெஹ்ரான். மார்ச் 23 –
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த நீரிணை வழியாகச் செல்லும் சில கப்பல்களுக்கு 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 18.8 கோடி) வரை போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஈரான் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளது. “போருக்கான விலை கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்”ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் அலாவுதீன் போரூஜெர்டிபோருக்கு அதற்கே உரிய செலவுகள் உண்டு. எனவே, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து சுங்கம் வசூலிப்பது தவிர்க்க முடியாதது. இது ஈரானின் இறையாண்மை அதிகாரத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த நீர்வழியில் ஈரான் ஒரு புதிய ‘இறையாண்மை ஆட்சியை’ செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் சர்வதேச அளவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
















