Home செய்திகள் தேசிய செய்திகள் ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

சென்னை: மார்ச் 30-
வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக ஓட்​டல்​களில விறகு பயன்​பாடு அதி​கரிப்​ப​தால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்​துள்​ளது.
அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா முழு​வதும் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வணிக சிலிண்​டர்​கள் கிடைப்​பது அரி​தாகி​விட்​டது. ஊரகப் பகு​தி​களில் வீட்டு உபயோக சிலிண்​டர் பதிவு செய்து பல நாட்​கள் காத்து கிடக்​கின்​றனர்.
அடுத்த சிலிண்​டர் பதிவு செய்​வதற்​கான இடைவெளி 21 நாட்​களாக இருந்​தது, நகர்ப்​புறங்​களில் 25 நாட்​களாக​வும், ஊரக பகு​தி​களில் 45 நாட்​களாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.
வீட்டு உபயோக சிலிண்​டரை நிரப்​புவதற்கு பதிவு செய்ய ஐவிஆர்​எஸ், ஆயில் நிறுவன செயலி, மிஸ்டு கால் என பல்​வேறு முறை​களில் முயன்​றும் பதிவு செய்ய முடிய​வில்லை என பொது​மக்​கள் புகார் தெரி​வித்து வரு​கின்​றனர். வணிக சமையல் காஸ் கிடைக்​காத​தால், பல ஓட்​டல்​கள் மூடப்​பட்​டன. சில ஓட்​டல்​களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்​பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்​காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்​பது என சிக்கன நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளன.சில ஓட்​டல்​கள் விறகு அடுப்​பு​களை பயன்​படுத்தி உணவு தயாரித்து வரு​கின்​றன. மேலும் மாணவர் தங்​கும் விடு​தி​கள், பயணி​யர் தங்​கும் விடு​தி​கள், தரை தளம் மட்​டும் கொண்ட தனி வீடு​கள் போன்​றவற்​றில் சுடு​தண்​ணீர் காய வைக்​க​வும், டீக்​கடைகள் பலவற்​றி​லும் விறகு அடுப்​பு​களை பயன்​படுத்த தொடங்​கி​யுள்​ளனர்.