
குவாஹாட்டி: மார்ச் 24 –
அசாம் மாநில கேபினட் அமைச்சர் நந்திதா கர்லோசாவுக்கு பாஜக மீண்டும் சீட் வழங்காததால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு திமா ஹசோ மாவட்டத்தின் ஹப்லாங் தனித் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நந்திதா கர்லோசா. இவர் பாஜக அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தார். இந்த முறை ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்த பலருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. சில புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து பாஜக கட்சியில் இருந்து விலகிய நந்திதா, காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஹப்லாங் தொகுதி வேட்பாளராக நிர்மல் என்பவரை அறிவித்திருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். ஹப்லாங் தொகுதியில் நந்திதா கர்லோசவுக்கு பதிலாக ரூபாலி லங்தசா என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பாஜக கட்சியில் இருந்து விலகிய நந்திதா, காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஹப்லாங் தொகுதி வேட்பாளராக நிர்மல் என்பவரை அறிவித்திருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள்.
பாஜக.வில் அமைச்சராக இருந்து பிரபலமான நந்திதா கர்லோசா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதால், இவரையே ஹப்லாங் தொகுதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்தது. இதையடுத்து அவர் நேற்று ஹப்லாங் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மனு செய்தார். இவரது வரவால் ஹப்லாங் பழங்குடியினர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இவர் பாஜக.வில் இருந்து வெளியேறியது, அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

















