பெங்களூரு: பிப்ரவரி 7-
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்த பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகுபாட்டின் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கர்நாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை தடுக்க ரோஹித் வெமுலா
பெயரில் தனிச்சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
இந்த சட்டம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

















