Home மாவட்டங்கள் பெங்களூர் கிரிஷ் சோடங்கர் பெருமிதம்

கிரிஷ் சோடங்கர் பெருமிதம்

சென்னை: மே 22-
காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 2 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்ற நிலை​யில் கட்​சி​யின் தொண்​டர்​களுக்கு இது வரலாற்று சிறப்​புமிக்க நாள் என காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ்​நாட்​டிலுள்ள அனைத்து காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் இது மிக​வும் வரலாற்​றுச் சிறப்​புமிக்க மற்​றும் உணர்ச்​சிப்​பூர்​வ​மான நாளாகும்.
கடந்த 59 ஆண்​டு​களாக நமது தொண்​டர்​கள் கட்​சி​யின் சித்​தாந்​தத்தை ஏந்​தி, இரவு பகலாகப் போராடி வந்​துள்​ளனர். ஆட்​சி​யில் பங்​கேற்​ப​தற்​கான எந்​தவொரு நம்​பிக்​கைக் கீற்​றும் தென்​ப​டாத சூழ்​நிலை​யிலும் கூட, தமிழ்​நாடு மக்​களுக்கு இன்​னும் சிறந்த முறை​யில் சேவை செய்​வதற்​காக, அரசில் அதி​காரத்​தைப் பகிர்ந்து கொள்ள வேண்​டும் என்று நமது தொண்​டர்​கள் எப்​போதும் விரும்​பினர்.அந்த வகை​யில், 59 ஆண்​டு​களுக்​குப் பிறகு இரண்டு காங்​கிரஸ் அமைச்​சர்​கள் இன்று புதிய அமைச்​சர​வை​யில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அமைச்​சர் பதவி​களை​யும் நமது சித்​தாந்​தத்​துக்​காக எவ்​வித சுயநல​முமின்றி உழைத்த, அர்ப்​பணிப்​புமிக்க, விசு​வாச​மான மற்​றும் கடின உழைப்​பாளி​களான நமது தொண்​டர்​களுக்கே நாங்​கள் சமர்ப்​பிக்​கிறோம். தே​போல், கடந்த 59 ஆண்​டு​களாக அதி​காரத்​தில் எந்​தப் பங்​கும் இல்​லாத நிலை​யிலும், தொண்​டர்​களின் பக்​கபல​மாக நின்ற நமது கட்​சித் தலை​மைக்​கும் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம். அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றுள்ள இரு​வரும் கட்​சித் தொண்​டர்​களின் நலனுக்​காகத் தங்​களை முழு​மை​யாக அர்ப்​பணித்​துக் கொள்​வார்​கள் என்று நான் நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.