சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்

புதுடெல்லி: பிப்ரவரி 10-
மக்​களவை​யில் பேச ராகுல் காந்​திக்கு அனு​மதி மறுக்​கப்​படு​வ​தால் சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வர இண்​டியா கூட்​டணி கட்​சிகள் திட்​ட​மிட்டு உள்​ளன.
கடந்த 2ம் தேதி மக்​களவை​யில் குடியரசுத் தலை​வரின் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்​போது முன்​னாள் ராணுவ தளபதி நரவனே​வின் நினை​வுக் குறிப்​பின் அடிப்​படை​யில் எழுதப்​பட்ட புத்​தகத்தை மேற்​கோள் காட்​டி, சீன எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேச முயன்​றார். அவருக்கு அனுமதி மறுக்​கப்​பட்​டது.
இதன் ​காரண​மாக மக்​களவை, மாநிலங்​களவை ஆகிய​வற்றை எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து முடக்கி வரு​கின்​றன. இதே விவ​காரம் தொடர்​பாக மக்​களவை, மாநிலங்​களவை அலு​வல்​கள் நேற்​றும் பாதிக்​கப்​பட்​டன. இரு அவை​களும் அடுத்​தடுத்து ஒத்திவைக்கப்பட்​டன. மக்​களவையை நேற்று பாஜக மூத்த எம்பி சந்​தியா ரேவழி நடத்​தி​னார்.
அப்​போது ராகுல் காந்தி கூறும்​போது, “பட்​ஜெட் விவாதத்​துக்கு முன்​பாக மக்​களவை​யில் நான் பேசுவதற்கு அனு​மதி வழங்கப்படும் என்று சபா​நாயகர் (ஓம் பிர்​லா) தனிப்​பட்ட முறையில் வாக்​குறுதி அளித்​தார். ஆனால் அவர் திடீரென பின் ​வாங்​கி​விட்​டார். இதன் பின்​னணி என்ன” என்று கேள்வி எழுப்பினார்.
மத்​திய அமைச்​சர் கருத்து ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்டை நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு திட்​ட​வட்​ட​மாக மறுத்​தார். அவர் கூறும்​போது, “காங்​கிரஸ் மூத்த தலை​வர் வேணுகோ​பால் சபா​நாயகர் ஓம் பிர்​லாவை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது நானும் உடனிருந்​தேன். குறிப்​பிட்ட விவ​காரம் (சீன எல்​லைப் பிரச்​சினை) குறித்து ராகுல் காந்தி பேசுவதற்கு சபா​நாயகர் எந்த வாக்​குறு​தி​யும் அளிக்​க​வில்​லை. ராகுல் காந்தி கூறு​வது முற்​றி​லும் தவறான தகவல்” என்றார்.இண்​டியா கூட்​டணி ஆலோ​சனை: முன்​ன​தாக நாடாளு​மன்ற வளாகத்​தில் நேற்று காலை இண்​டியா கூட்​டணி எம்​பிக்​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.இதன் ​பிறகு காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் கூறிய​தாவது: நாடாளு​மன்ற விதி​களின்​படி மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் பிரதமரின் நிழல் போன்​றவர். ஆனால் மக்களவை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது. ஆளும் கட்​சி​யினர், உயிருடன் இல்லாதவர்​கள் குறித்து அவதூறாக பேசுகின்​றனர்.மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு எதிர்க்​கட்​சிகளின் குரலை ஒடுக்க முயற்சி செய்​கிறது. இது​போன்ற அணுகு ​முறையை இதற்கு முன்பு பார்த்​தது கிடை​யாது. மக்​களவை சபா​நாயகர் மீது நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்​படுமா என்​பது குறித்து இப்​போதைக்கு கருத்து தெரிவிக்க முடி​யாது. என்ன நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது என்​பதை அறிய காத்​திருங்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.