
ஸ்ரீநகர்: மார்ச் 5-
ஸ்ரீநகர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை வெளியான அரசு உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு 4 அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஸ்ரீநகர் மத்திய சிறைக்கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதிகாரி சபா ஷாலுக்கு வழங்கப்பட்டது.
சபா ஷால் இந்த நியமனத்துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார்.
ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். ஸ்ரீநகரில் வசதியான மக்கள் வசிக்கும் பிர் பாக் பகுதியில் வசிக்கும் சபா ஷால், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2012ல் காஷ்மீர் அரசுப் பணிகள் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

















