டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

மும்பை, மார்ச் 5- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்​துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான நடப்பு சாம்பியனான இந்​திய அணி லீக் சுற்​றில் அனைத்து ஆட்டங்​களி​லும் வெற்றி கண்ட நிலை​யில் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்​கா​விடம் அதிர்ச்சி தோல்வி கண்​டிருந்​தது. இதைத் தொடர்ந்து ஜிம்​பாப்​வே, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியை வீழ்த்தி அரை இறு​திக்​குள் நுழைந்​தது. 2010, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான இங்​கிலாந்து அணி லீக் சுற்​றில் மேற்கு இந்​தி​யத் தீவு​களிடம் தோல்வி அடைந்த நிலை​யில் மற்ற 3 ஆட்​டங்​களி​லும் வெற்​றியை பதிவு செய்திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் இலங்​கை, பாகிஸ்​தான், நியூஸிலாந்து அணி​களை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது. சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக ஏற்​பட்ட மோச​மான தோல்விக்​குப் பிறகு, இந்​திய அணி​யின் பேட்டிங் வரிசை​யில் சில மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. டாப் ஆர்​டர் பேட்​டர்​கள் மூவரும் இடதுகை வீரர்​களாக இருப்​பது இந்​திய அணிக்கு பின்​னடைவை ஏற்​படுத்​திய நிலை​யில், தொடக்க ஆட்​டக்​கார​ராக சஞ்சு சாம்​சன் கொண்​டு​வரப்​பட்​டார். இதன் மூலம் டாப் ஆர்​டரில் தொடர்ந்த வலதுகை இடதுகை காம்​பினேஷன் பிரச்​சினையும் முடிவுக்கு வந்தது. அதன் பின்​னர் இந்​திய அணி​யும் சிறப்​பாக செயல்பட்டு வரு​கிறது. கால் இறுதி போட்டி போன்று அமைந்த மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான ஆட்டத்தில் சஞ்சு சாம்​சன் கடைசி வரை களத்​தில் நின்று 97 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு உதவி​யிருந்​தார். எந்த ஒரு கட்​டத்​தி​லும் அவசரக​தி​யுடன் மட்​டையை சுழற்றாமல் கடைசி வரை பொறுமை​யாக விளை​யாடி இந்​திய அணி வெற்​றிக்​கோட்டை கடப்​ப​தற்கு உறுதுணையாக இருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும். லீக் ஆட்டங்களில் அதிரடி காட்​டிய இஷான் கிஷன் சூப்​பர் 8 சுற்​றில் ஏமாற்​றம் அளித்​தார்.
இதே​போன்று தடு​மாறிவரும் அபிஷேக் சர்​மா, ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக அரை சதம் அடித்​திருந்​தார். ஆனால் மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் விரைவு​க​தி​யில் விளை​யாடி 10 ரன்​களில் வெளி​யேறி​யிருந்​தார். இவர்​கள் இரு​வரும் மீண்​டும் பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். திலக் வர்​மா, ஷிவம் துபே ஆகியோர் சிறந்த பார்​மில் உள்ளனர். சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் மீண்​டும் தாக்​குதல் ஆட்​டத்தை தொடுக்​கும் பட்​சத்​தில் அணி​யின் பலம் அதி​கரிக்​கும். பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் கடந்த ஆட்​டத்​தில் அர்​ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்​டி​யா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் ஓவருக்கு சராசரி​யாக தலா 10 ரன்​களுக்கு மேல் தாரை வார்த்​திருந்​தனர். அக்​சர் படேல் ஓவருக்கு சராசரி​யாக 8.80 ரன்​களை​யும் ஜஸ்பிரீத் பும்ரா சராசரி​யாக 9 ரன்​களை​யும் வழங்கியிருந்தனர். இதனால் பந்​து​வீச்சு திட்​டங்​களில் இந்திய அணி ஏதேனும் மாற்​றங்​களை மேற்கொள்ளக்கூடும். அக்​சர் படேல் அல்​லது வருண் சக்​ர​வர்த்தி நீக்​கப்​பட்டு குல்​தீப் யாதவ் சேர்க்​கப்பட வாய்ப்பு உள்​ளது