Home செய்திகள் தேசிய செய்திகள் திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்பதி: மார்ச் 13-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் கிருஷ்ணதேஜா மாளிகை வரை 3 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மோர், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர். 25,569 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் இதமான காற்று வீசுகிறது. இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
கியாஸ், சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை பக்தர்களுக்கு வழக்கம்போல அன்னதானம், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.