
பெங்களூரு: ஏப்ரல் 6 –
கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மார்ச் 28 அன்று, ஒரு பாரில் ஏற்பட்ட கைகலப்பிற்குப் பிறகு, சமூக விரோதிகள் நடிகர் நிரஞ்சனை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த நிரஞ்சன், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
நடிகர் நிரஞ்சன், ‘ஓடையா’ திரைப்படத்தில் தர்ஷனின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிரஞ்சன், வேலை விஷயமாக நடிகர் யாஷ் சூர்யாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அங்கு சமூக விரோதிகள் அவரை பீர் பாட்டிலால் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
வேலையை முடித்த பிறகு, நடிகர் நிரஞ்சன் மந்திரி அலையன்ஸ் அருகே உள்ள ஒரு பாருக்கு வந்திருந்தார். தண்ணீர் குடிப்பதற்காக பாருக்கு வந்ததாக நடிகர் நிரஞ்சன் கூறிய நிலையில், நிரஞ்சன் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளார். பீர் பாட்டிலால் தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுப்ரமணியபுரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரி நடைப்பெற்று வருகிறது.


















