Home மாவட்டங்கள் பெங்களூர் பறக்கும் படை சோதனையில் சிக்கிய100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பறக்கும் படை சோதனையில் சிக்கிய100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சென்னை: ஏப்ரல் 11-
சென்​னை​யில் தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​களின் அதிரடி சோதனையில் 100 டம்மி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சிக்​கியுள்ளன.
ஒரத்தநாடு சட்டசபை தொகுதி திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய கார்​டு​களும் பறிமுதல் செய்​யப்​பட்​டன. தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
இதற்கிடையே காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்​ணாநகர் சட்​டசபை தொகு​திக்கு உட்​பட்ட அரும்​பாக்​கம் 100 அடி சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.
அப்​போது அந்த வழி​யாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்​தனர். அப்​போது அதில் 100 டம்மி மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) இருந்​தது தெரிய​வந்​தது. மேலும், திமுக ஒரத்​த​நாடு சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாளர் வைத்​திலிங்கத்​தின் புகைப்​படங்​கள் அடங்​கிய கார்​டு​கள் கொண்ட 5 பார்​சல்​கள் இருந்​தன. இதனைக் கண்டு தேர்​தல் பறக்​கும் படை​யினர் அனைத்​தை​யும் பறி​முதல் செய்​தனர்.