Home செய்திகள் தேசிய செய்திகள் மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’

மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’

புதுடெல்லி: மார்ச் 31 –
மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்தி திட்​டத்​தின் (இசிஎம்​எஸ்) கீழ் பயன்​பெறும் நிறு​வனங்​கள், தங்​களது தயாரிப்புகளை இந்​தி​யா​விலேயே வடிவ​மைக்​கா​விட்​டால் மத்​திய அரசின் சலுகைகள் கிடைக்​காது என்று மத்​திய அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்​தித் திட்​டத்​தில் (இசிஎம்​எஸ்) பங்​கேற்​கும் நிறு​வனங்​கள், வெறும் உதிரிபாகங்களை இணைக்​கும் பணி​யோடு நின்​று​வி​டா​மல், உள்நாட்​டிலேயே தயாரிப்​பு​களை வடிவ​மைக்​கும் திறனை மேம்படுத்த வேண்​டும். உள்​ நாட்​டுத் தொழில் சூழலை வலுப்படுத்​து​வ​தில் அக்​கறை காட்​டாத நிறு​வனங்​களை இந்தத்திட்​டத்​தில் இருந்து அப்​புறப்​படுத்த மத்​திய அரசு தயங்காது.
இது​வரை இந்​தத் துறை​யில் நிறு​வனங்​கள் காட்டி வரும் முன்னேற்​றம் மற்​றும் ஒத்​துழைப்பு நாங்​கள் எதிர்​பார்த்த அளவில் இல்லை என்​பதே உண்​மை. நிறு​வனங்​களின் செயல்​பாடு​கள் ஏமாற்​றம் அளிக்​கின்​றன. வடிவ​மைப்பு மற்​றும் தர மேம்​பாட்​டுப் பணி​களில் நிறு​வனங்​கள் மெத்​தன​மாகச் செயல்​படு​வதை ஏற்க முடி​யாது. தொழில் துறை​யினர் தங்​களைச் சீர்​படுத்​திக் கொள்ளாவிட்​டால் மத்​திய அரசு கடுமை​யான முடிவு​களை எடுக்கும்.