மீண்டும் தமிழகம் வருகிறார் கிரிஷ் சோடங்கர்

சென்னை: பிப்ரவரி 13-
திமுக​வுடன் முரண்​பாடுகள் நிலவும் சூழலில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் மீண்டும் சென்னைக்கு பிப்.18-ம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகி​யுள்ளது.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர், ‘தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு​வார்த்தையை தொடங்க திமுக தாமதம் செய்வது வருத்​தமளிக்​கிறது’என்​றார். இதை அடுத்து பிப்.22-ம் தேதி முதல் கூட்டணி பேச்சு​வார்த்தை தொடங்​கப்​படும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்​டிருந்தது.
இந்த சர்ச்சை ஒய்வதற்குள் ஒரு தனியார் ஊடக நிகழ்வில் பேசிய திமுக தலைவரும், முதல்​வ​ருமான மு.க.ஸ்​டாலின் பேசும்​போது, “தமிழ​கத்தில் கூட்டணி ஆட்சி சாத்தி​யமில்லாத ஒன்று. அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்​லை”என்று திட்ட​வட்டமாக தெரிவித்​தார்.
இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்​தனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கர​வர்த்தி ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்​தியது. தொடர் கருத்து மோதல்​களால் இருகட்​சிகளுக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவு​கிறது.
இந்நிலையில் வரும் 18-ம் தேதி சென்னை சத்தி​யமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்​டத்​தில், ‘மாவட்டத் தலைவர்​களின் கருத்​துகள் விரிவாகக் கேட்கப்​பட​வுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்ற அதிரடி முடிவுக்குப் பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் எழுந்​துள்ள கோபமும் வருத்​தமும் இக்கூட்​டத்தில் விவா​திக்​கப்​படலாம் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.