ராகுல் காந்திக்கு நிர்​மலா சீதா​ராமன் பதில்

புதுடெல்லி: பிப்ரவரி.2- மத்​திய பட்​ஜெட் பற்றி ராகுல் காந்தி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘மக்​களின் நலன்​கள் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன’ என்று கூறி​யிருந்​தார்.
இது தொடர்​பாக ராகுலுக்கு பதிலளித்து டெல்​லி​யில் பேட்​டியளித்த மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறுகை​யில், “அனைத்து தரப்​பினரை​யும் மனதில் கொண்டே பட்​ஜெட் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.
அரசி​யல் ரீதி​யில் விமர்​சிக்க விரும்​பி​னால், ராகுல் தாராள​மாக செய்​யட்​டும். ஆனால், உங்​கள் வாதத்துக்கு உண்​மை​யான அடிப்​படைகளை நீங்​கள் எனக்கு கூற விரும்​பி​னால், அதற்கு பதிலளிக்​கத் தயார். விமர்​சனம் உண்​மை​யாக இருக்​க வேண்​டும்​” என்றார்​.