Home செய்திகள் உலக செய்திகள் ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்

ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்

வாஷிங்டன்: மார்ச் 30-
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர் மதிப்​புள்ள அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்​பிலான ராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.இதுகுறித்து அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்’ நாளிதழ் செய்​தி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஈரான் உடனான மோதல் தொடங்​கிய முதல் மூன்று வாரங்​களில் மட்​டும் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்​லியன் டாலர் (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.29,000 கோடி வரை) இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கணக்​கிடப்​பட்​டுள்​ளது.
இதனை பென்​டகன் முன்​னாள் பட்​ஜெட் அதி​காரி எலைன் மெக்​கஸ்​கர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். ஈரான் நடத்​திய தாக்​குதலில் அமெரிக்​கா​வின் அதிநவீன எஃப்​-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசர​மாகத் தரையிறக்​கப்பட்​டது. மேலும், குவைத் விமானம் தவறு​தலாகச் சுட்​ட​தில் மூன்று எஃப்​-15இ ரக விமானங்​கள் விழுந்து நொறுங்​கின.
ஈராக் வான்​பரப்​பில் இரண்டு எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மோதிக்​கொண்​ட​தில் ஆறு வீரர்​கள் உயிரிழந்​தனர். சவுதி அரேபி​யா​வில் உள்ள இளவரசர் சுல்​தான் விமானப்​படை தளத்​தின் மீது ஈரான் நடத்​திய ஏவு​கணைத் தாக்​குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்​கள் சேதமடைந்து தற்​போது பழுது​பார்க்​கப்​பட்டு வரு​கின்​றன.