
லக்னோ, ஏப்ரல் 13- ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இந்த ஆட்டம் லக்னோவிலுள்ள அடல்பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எய்ட்ன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். ஆனால் இந்த அதிரடி நீடிக்கவில்லை. மிட்செல் மார்ஷ் 4 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எய்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 30 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் 11 பந்துகளில் 18 ரன்களும், ஆயுஷ் பதோனி 9, நிக்கோலஸ் பூரன் 19, அப்துல் சமத் 18, முகுல் சவுத்ரி 18, ஜார்ஜ் லிண்டே 16 ரன்கள் சேர்த்தனர். முகமது ஷமி 12 ரன்களும், அவேஷ் கான் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். அசோக் சர்மா 2 விக்கெட்களையும், முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடத் தொடங்கியது.





















