Home விளையாட்டு வங்​கதேசத்​திடம் பாகிஸ்தான் படு​தோல்வி

வங்​கதேசத்​திடம் பாகிஸ்தான் படு​தோல்வி

டாக்கா, மார்ச் 12- வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டாக்​கா​வில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 30.4 ஓவர்​களில் 114 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஃபாஹீம் அஷ்ரப் 47 பந்​துகளில், 37 ரன்​ சேர்த்​தார். சாஹிப் சதா ஃபர்​ஹான் 27, மாஸ் சதகத் 18, ஷாமில் ஹுசைன் 4, முகமது ரிஸ்​வான் 10, சல்​மான் ஆஹா 5, ஹுசைன் தலத் 4, அப்​துல் சமத் 0, கேப்​டன் ஷாகீன் ஷா அப்​ரிடி 4, முகமது வாசிம் 0 ரன்​களில் நடையை கட்​டினர்.வங்​கதேச அணி தரப்​பில் வேகப்​பந்து வீச்​சாள​ரான நகித் ராணா 7 ஓவர்​களை வீசி 24 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சுழற்​பந்து வீச்​சாள​ரான மெஹிதி ஹசன் மிராஸ் 10 ஓவர்​களை வீசி 29 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 115 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த வங்​கதேச அணி 15.1 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 115 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.தொடக்க வீர​ரான தன்​ஸித் ஹசன் 42 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 67 ரன்​கள் விளாசி​னார். லிட்​டன் தாஸ் 3 ரன்​கள் சேர்த்​தார். முன்​ன​தாக சைஃப் ஹசன் 4, நஜ்​முல் ஹாசைன் ஷான்டோ 27 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் நாளை (13-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.