
தஞ்சாவூர்: மார்ச். 5-
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
இவ்விழாவில் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன். * அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை. ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு அமைந்த கூட்டணி அடுத்த தேர்தலில் நீடித்தது இல்லை என்பதும் வரலாறு என்றார்.


















