Home செய்திகள் தேசிய செய்திகள் வவ்வால்களிடம் புதிய கரோனா

வவ்வால்களிடம் புதிய கரோனா

புதுடெல்லி: மே 11-
வவ்​வால்​களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது:
தாய்​லாந்​தில் உள்ள வவ்​வால்​களிடம் கண்​டறியப்​பட்​டுள்ள புதிய வைரஸ், மனிதர்​களைத் தொற்​றும் ஆற்​றலைக் கொண்​டிருக்​கலாம். இந்த வைரஸ் மக்​களிடையே பரவி வரு​வதற்​கான ஆதா​ரம் இல்​லை. ஆனாலும், விலங்​கு​களிடம் பரவும் வைரஸ்​களை கண்​காணிப்​பது முக்​கி​யம்.இந்த ஆய்​வில், வைரஸ் ஏசிஇ2 என்ற மனித உயிரணு புரதங்​களு​டன் இணை​யக் கூடும் என்று ஆராய்ச்​சி​யாளர்​கள் கவனித்​துள்​ளனர். இதன் பொருள் ஒரு பெருந்​தொற்று உடனடி​யாக ஏற்​படும் என்​ப​தல்ல, மாறாக இது விலங்​கு​களிடம் இருந்து மனிதர்​களுக்​குப் பரவக்​கூடிய வாய்ப்பு இருப்​ப​தைக் காட்​டு​கிறது. இவ்​வாறு கட்டுரையில்​ கூறப்​பட்​டுள்​ளது.