
வாஷிங்டன்: பிப்ரவரி 3-
தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஆரக்கிள் நிறுவனம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரக்கிள் நிறுவனம் சார்பில் ஏஐ டேட்டா மையங்கள் அமைக்கும் பணிக்கு போதிய நிதி இல்லாததால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆரக்கிள் (Oracle) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.தற்போது இந்த நிறுவனம் புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது. அதாவது ஆரக்கிள் நிறுவனம் புதிதாக ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தரவு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 30,000 பேரை பணி நீக்க முடிவு இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஆரக்கிள் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது.
இந்நிலையில் தான் ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நிதி பற்றாக்குறையில் நிறுவனம் சிக்கியது. இதனால் சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. 10 பில்லியன் டாலர் வரை மிச்சம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலமாக அந்த நிறுவனத்துக்கு 8 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இதனை அந்த நிறுவனம் ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. இருப்பினும் இது போதுமானதாக இருக்காது. பிசினஸ் யூனிட்டுகளையும் விற்பனை செய்வது பற்றியும் ஆராய்ந்து வருகிறது. கைவிரித்த வங்கிகள் இதுபற்றி ஆரக்கிள் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த நிறுவனம் மேற்கூறிய திட்டத்தை கையில் எடுப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஆரக்கிள் நிறுவனம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.ஊழியர்கள் அதிர்ச்சி ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த முடிவு என்பது அங்கு பணியாற்றும் ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இது அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை, வணிக திட்டங்கள், எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மேற்கூறியபடி 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தால் அது இதுவரை அந்த நிறுனம் கண்டிராத மிகப்பெரிய பணி நீக்கங்களில் ஒன்றாக அமையலாம்.
















