Home மாவட்டங்கள் பெங்களூர் கேரளாவில் வாட்ட தொடங்கிய வெயில்

கேரளாவில் வாட்ட தொடங்கிய வெயில்

சென்னை: பிப்ரவரி 6-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருந்தாலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. மட்டுமல்லாது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் கேரளா மற்றும் கர்நாடகாவில் வெயில் 100 டிகிரி செல்சியஸை தொட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலம் எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
COMK வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் குளிர்காலம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு இனிமையானதாகவே அமைந்தது. குறிப்பாக தமிழகத்தின் உள்மாவட்டப் பகுதிகளில் வழக்கத்தைவிடக் குளிர் அதிகமாக இருந்தது. புத்தாண்டு பிறந்ததிலிருந்து தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளிலும் இதமான சூழல் நிலவியது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல்நேரம் இனிமையாகவும், இரவுகள் குளிர்ச்சியாகவும் இருந்தன.
“எல்லா நல்லவற்றுக்கும் ஒரு முடிவு வரும்” என்பார்கள். அதற்கேற்ப, 2026 குளிர்காலமும் விரைவில் படிப்படியாக விலகத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு இதமான வானிலை நீடிக்கக்கூடும். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில் நண்பகல் வெப்பநிலை ஏற்கனவே உயரத் தொடங்கிவிட்டது. கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37°Cஐ நெருங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியாவின் வெப்பமான பகுதியாக மேற்கு கடற்கரைப் பகுதி விளங்கி வருகிறது. வானிலை மாதிரிகளின்படி, அடுத்த வாரத்திலிருந்து இந்தியாவின் உள்மாவட்டப் பகுதிகளில் நண்பகல் வெப்பநிலை உயரும். இரவுகள் குளிர்ந்தே இருக்கும் என்றாலும், பகல்நேரம் வெப்பமாக மாறும். பெரும்பாலான இந்தியப் பகுதிகளுக்கு இதுவே தீவிரமான குளிர்காலத்தின் கடைசி கட்டமாக இருக்கலாம்.