ஜம்மு காஷ்மீருக்கு கடந்த ஆண்டில் 1.7 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜம்மு: பிப்ரவரி 9-
ஜம்மு காஷ்மீரில் கடந்​தாண்டு 36,000 வெளி​நாட்​டினர் உட்பட 1.7 கோடிக்​கும் மேற்​பட்ட சுற்​றுலா பயணி​கள் வந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு கடந்​தாண்டு வந்த சுற்​றுலா பயணி​கள் எண்ணிக்கை எவ்​வளவு என காஷ்மீர் சட்​டப்​பேர​வை​யில் எம்​எல்ஏ ஹசானி மசூதி கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.
இதற்கு சுற்​றுலாத்​துறை எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறியிருப்​ப​தாவது: ”ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்​துக்கு கடந்​தாண்டு 1,77,65,390 சுற்​றுலா பயணி​கள் வருகை தந்​தனர். இவர்​களில் 36,410 பேர் வெளி​ நாட்டு சுற்​றுலா பயணி​கள். இந்தாண்​டில் காஷ்மீருக்கு சுற்​றுலா பயணி​களின் எண்ணிக்கைக்கு இலக்கு ஏதும் நிர்​ண​யிக்​கப்​பட​வில்​லை.
சுற்​றுலா பயணி​களின் வரு​கையை அதி​கரிக்க ஆக்​கப்​பூர்​வ​மான முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. காஷ்மீர் சுற்​றுலாவை விளம்​பரப்​படுத்​த​வும், வசதி​களை மேம்​படுத்​த​வும் பல நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. ஸ்ரீநகர் விமான நிலை​யத்​தில் சர்​வ​தேச விமானங்​களின் போக்​கு​வரத்து மீண்​டும் தொடங்க அனைத்து வசதி​களும் தயார் நிலையில் உள்​ளன. இங்கு குடி​யுரிமை, சுங்​கம், பாது​காப்​பு, மற்​றும் பயணி​களை கையாள்​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. சுற்​றுலா பயணி​கள் தங்​கு​வதற்​கான வசதி​யும் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் உள்​ளூர் வேலை​ வாய்ப்பு மேம்​பட்​டுள்​ளது. இவ்​வாறு காஷ்மீர் சுற்​றுலாத்​துறை கூறி​யுள்​ளது. பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.