நேதாஜியின் ஐஎன்ஏ வீரர் ஜெயராஜை சந்தித்த பிரதமர் மோடி

கோலாலம்பூர்: பிப்ரவரி 9-
நேதாஜி சுபாஷ் சந்​திர போஸின் இந்​திய தேசிய ராணுவத்​தில் (ஐஎன்ஏ) மலேசி​யா, சிங்​கப்​பூரை சேர்ந்த இந்​திய வம்​சாவளி​யினர் இணைந்து பிரிட்​டிஷ் படைக்கு எதி​ராக வீர, தீரத்​துடன் போரிட்​டனர். அவர்​களில் பலர் உயிரோடு உள்​ளனர்.
தற்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை செயல்​படு​கிறது. இந்த அறக்​கட்​டளை​யில் ஐஎன்ஏ படை​ வீரர்​கள், உயி​ரிழந்த வீரர்​களின் வாரிசுகள் உறுப்பினர்​களாக உள்​ளனர். கோலாலம்​பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை நிர்​வாகி​களை பிரதமர் நரேந்​திர மோடி சந்தித்துப் பேசி​னார். குறிப்​பாக ஐஎன்ஏ வீரர் ஜெய​ராஜ் ராஜா ராவுடன் அவர் தனிப்​பட்ட முறை​யில் கலந்​துரை​யாடி​னார். இதுதொடர்​பான புகைப்​படங்​களை பிரதமர் மோடி தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.
அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ”ஐஎன்ஏ வீரர் ஜெய​ராஜ் ராஜா ராவை சந்​தித்​ததை முக்​கிய நிகழ்​வாக கருதுகிறேன். அவர், வீரம், தியாகத்​தின் அடை​யாள​மாக விளங்குகிறார். அவரது வாழ்க்கை அனுபவங்​கள் அனை​வருக்​கும் ஊக்​கம் அளிக்​கும் வகை​யில் உள்​ளது. சுதந்​திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ், அவரது ஐஎன்ஏ படை​யில் இருந்த வீரமிக்க பெண்​கள், ஆண்​களுக்கு மரி​யாதை செலுத்த நாம் கடமைப்​பட்டு உள்​ளோம். அவர்​களின் வீரமே, இந்​தி​யா​வின் தலை​யெழுத்தை மாற்​றியது. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.
ஐஎன்ஏ வீரர் ஜெய​ராஜ் ராஜா ராவ் கூறிய​தாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்​தித்​தது மிக​வும் அற்​புத​மான தருணம். அவர் மிக​வும் இளமை​யாக இருக்​கிறார். நேதாஜி உடனான எனது பயணம் குறித்து அவர் மிக​வும் ஆர்​வ​மாக கேட்​டறிந்​தார். இந்தியா​வின் வளர்ச்சி குறித்து நாங்​கள் பேசினோம். வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க பிரதமர் நரேந்​திர மோடி மிகுந்த உறு​தி​யுடன் இருக்​கிறார்.