Home செய்திகள் தேசிய செய்திகள் உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

புதுடெல்லி: மார்ச் 24 –
உத்​தர பிரதேசத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​களான டி.பிரகாஷ், எல்​.​வி.ஆண்​டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் ஒரு​வர் மாநில காவல் துறைக்கு தலை​மையேற்​கும் வாய்ப்​பு உள்​ளது.
திருநெல்​வேலி பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்​தவர் டி.பிர​காஷ். சென்னை கிறிஸ்​தவக் கல்​லூரி​யில் பொது நிர்​வாகத்​தில் எம்​.ஏ., எம்​.பில். பட்​ட​மும் பெற்​றார். பேராசிரியர் பணிக்கு முயன்ற இவர், மத்​திய அரசின் யுபிஎஸ்சி தேர்வை எழு​தி​னார். அதில் 1994ல் அவரது முதல் முயற்​சி​யிலேயே ஐபிஎஸ் கிடைத்​தது. உ.பி.மாநில பிரி​வில் பணி ஒதுக்​கப்​பட்​டது.
தற்​போது, முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மையி​லான பாஜக ஆட்​சி​யில் உ.பி. ரயில்வே ஏடிஜிபி​யாக அவர் சிறப்​புடன் பணியாற்றி வந்​தார். இந்​நிலை​யில், அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டு உள்​ளது. இது​போல் உ.பி.​யில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி​யாற்​றும் மற்​றொரு தமிழர் எல்​.​வி ஆண்​டனி தேவ் குமார். திருநெல்​வேலி, திசையன்​விளையை சேர்ந்த இவர், முதுகலை​யுடன் சட்​ட​மும் பயின்​றவர்.
யுபிஎஸ்சி தேர்​வில் தீவிரம் காட்டி வந்த இவருக்கு 1994-ல் ஐபிஎஸ் கிடைத்​தது. உ.பி. மாநிலப் பிரி​வில் பணி​யாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது. இவர் பணி​யில் நேர்மை காரண​மாக எவரும் இல்​லாத வகை​யில் அதிக முறை பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டு வந்​தார். உளவுத் துறை​யின் ஆக்ரா மாவட்ட கண்​காணிப்​பாளர் உள்​ளிட்ட பல முக்​கியப் பொறுப்​பு​களை ஆண்​டனி வகித்​துள்​ளார்.
ராமர் கோயில் பாது​காப்​புக்​காக புதி​தாகத் தொடங்​கப்​பட்​டுள்ள சிறப்பு பாது​காப்பு படை தலைமை அதி​காரி​யாக​வும் இருந்து அதை அமைத்​தார். ஏடிஜிபி​யான ஆண்​டனி தற்​போது, மாநில காவல்​துறை தலை​மையகத்​தின் ரூல்ஸ் அண்ட் மேனுவல்ஸ் பிரி​வின் தலைமை அதி​காரி​யாக உள்​ளார். இவருக்​கும் டிஜிபி பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. உ.பி.​யில் தற்​போது பொறுப்பு டிஜிபியாக ராஜீவ் கிருஷ்ணா உள்​ளார்.
எனினும், டிஜிபி நிரந்​தரப் பணிக்கு என உரிய தகு​தி​யும், அதிகத்திறமை​யும் வாய்ந்​தவரை அமர்த்த முதல்​வர் யோகி முயற்சிக்கிறார். இதற்​கானத் தேர்​வுப் பட்​டியலில் பிர​காஷ் மற்றும் ஆண்டனி பெயர்​களும் உள்​ளன. உ.பி. அரசு சார்​பில் இறுதி​யாக 3 அதி​காரி​கள் கொண்ட பட்​டியல் மத்​திய அரசுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளது. இதி​லும் இடம்​பெற்​று, ஒரு தமிழரே உ.பி.​யின் டிஜிபி​யாகும் வாய்ப்​பும் உரு​வாகி உள்​ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ், ஐஎப்​எஸ் உள்​ளிட்ட பல்வேறு பணிகளில் தமிழகத்​தைச் சேர்ந்த சுமார் 32 அதி​காரி​கள் உ.பி.யில் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களில் பலருக்​கும் முதல்​வர் யோகி முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறார். டிஜிபி அந்​தஸ்​துக்கு உயர்ந்த பிர​காஷ், ஆண்​டனிக்​கான உத்​தர​வை​யும் மத்​திய உள்துறை அமைச்​சகம் சார்​பில் அதில் இயக்​குந​ராகப்​ பணியாற்றும்​ தமிழ​ரான ஏ.தினேஷ்கு​மார்​ வெளி​யிட்​டுள்​ளார்​.