Home மாவட்டங்கள் பெங்களூர் “காங்கிரஸ் ​ஆட்சி புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது” – அமித் ஷா குற்றச்சாட்டு

“காங்கிரஸ் ​ஆட்சி புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது” – அமித் ஷா குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஏப்ரல் 7-
புதுச்​சேரி பாஜக சார்​பில் என்​டிஏ வேட்​பாளர்​களை ஆதரித்து மண்​ணாடிப்​பட்டு தொகுதி திருக்​க​னுாரில் நேற்று மாலை பிரச்​சார கூட்​டம் நடை​பெற்​றது.
மண்​ணாடிப்​பட்டு வேட்​பாள​ரும், அமைச்​சரு​மான நமச்​சி​வா​யம் வரவேற்​றார். கூட்​டத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பேசி​ய​தாவது: புதுச்​சேரி​யில் வாக்​குப்​ப​திவுக்கு இன்​னும் 3 நாட்​களே உள்​ளன. புதுச்​சேரியை உயர்ந்த, உன்​னத​மான இடத்​துக்கு என்​டிஏ அரசு எடுத்​துச் செல்​லும் என உறுதி அளிக்​கிறேன்.
காங்​கிரஸின் நாராயண​சாமி ஆட்​சி, புதுச்​சேரி மாநிலத்தை பின்​னோக்கி தள்​ளி​விட்​டது. இதை சரிசெய்​யவே 5 ஆண்​டு​கள் ஆகி​விட்​டன. இப்​போது புதுச்​சேரி வளர்ச்​சியை நோக்​கிச் செல்ல மீண்​டும் இந்​தக் கூட்​டணி வெற்​றி​பெற வேண்​டும்.
புதுச்​சேரி​யில் கடந்​த​முறை என்​டிஏ கூட்​டணி வெற்றி பெற்​ற​போது காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, ‘இந்​தி​யா​வில் ஒரு சிறிய இடத்​தில் வெற்றி பெற்​றதை பெரு​மை​யாக பேசுகிறீர்​கள்’ என்று எள்ளி நகை​யாடி​னார். 300 இடங்​களாக இருந்​தா​லும், 30 இடங்​களாக இருந்​தா​லும் புதுச்​சேரி இந்​தி​யா​வின் ஒரு அங்​கம். எங்​கள் இதயத்​தில் உள்ள மாநிலம். பாரதத்​தின் வெற்​றிக்கு புதுச்​சேரி​யின் வெற்றி மிக​வும் அவசி​யம். நமச்​சி​வா​யத்​துக்கு புதுச்​சேரி​யின் வளர்ச்​சி​யில் முக்​கிய பங்கு உள்​ளது. பிரதமர் மோடி ஆயிர​மா​யிரம் கோடியை புதுச்​சேரிக்கு வழங்​கிய​தில் நமச்​சி​வா​யத்​துக்கு முக்​கிய பங்கு உள்​ளது.
அவர் பல வேலை​வாய்ப்பு முகாம்​களை வெற்​றிகர​மாக நடத்​தி​யுள்​ளார். என்​டிஏ கூட்​ட​ணி​யில் அனைத்து கட்​சிகளும் ஒற்​றுமை​யாக தேர்​தலை சந்​திக்​கிறோம். ஆனால் இண்​டியா கூட்​ட​ணி​யில் இப்​போதே தொகு​திக்​காக, பதவிக்​காக, சண்டை போட்​டுக் கொள்​கின்​றனர். இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கட்​சிகள் கூட்​ட​ணியி​லிருந்து விலகி தனித்து போட்​டி​யிடு​கின்​றன. திமுக​வும், காங்​கிரஸும் கூட ஒன்​றாக இல்​லை. அவர்​கள் 5 தொகு​தி​களில் நேருக்கு நேர் மோதிக் கொள்​கின்​றனர். நமது கூட்​டணி கட்​சிகள் அனைத்​தும் ஒன்​றாக இருந்​து, ஒற்​றுமையை பறை​சாற்றி வரு​கின்​றன. ஒவ்​வொரு துறை​யாக வளர்ச்சி திட்​டங்​களை கொடுத்து புதுச்​சேரியை முன்​னேறிய மாநில​மாக ஆக்க வேண்​டும் என நாங்​கள் திட்​ட​மிட்டு வரு​கிறோம். ஆனால் ராகுல் பாகிஸ்​தான் விலை உயர்வை கூறி மக்​களை பயமுறுத்​துகிறார். புதுச்​சேரி பெரும் வளர்ச்​சியை நோக்கி செல்ல, 5 ஆண்டு ஆட்​சி​யின் வெற்றி தொடர என்​டிஏக்கு ஆதரவு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இக் கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா, பாஜக மாநிலத் தலை​வர் வி.பி.​ராமலிங்​கம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.