Home பக்தி திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது

திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது

சென்னை: ​ஏப்ரல் 25 –
திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சித்​திரை பிரம்​மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. கருட சேவை 3-ம் தேதி​யும், தேரோட்​டம் 7-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.
108 வைணவ திவ்​யதேசங்​களில் ஒன்​றாக விளங்​கு​வது சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெருமாள் கோயில். இத்​தலத்​தில் யோக நரசிம்​மர் மேற்கு நோக்கி அருள்​பாலிக்க, உற்​சவ​ரான தெள்​ளிய சிங்​கர், ஸ்ரீதே​வி, பூதேவி நாச்​சி​யாருடன் பக்​தர்​களுக்கு சேவை சாதிக்​கிறார்.
இங்கு ஆண்​டு​தோறும் பார்த்​த​சா​ரதி சுவாமிக்கு சித்​திரை மாதத்​தி​லும், நரசிம்​மருக்கு ஆனி மாதத்​தி​லும் பிரம்​மோற்​சவம் நடை​பெறு​வது வழக்​கம். அந்த வகை​யில், பார்த்​த​சா​ரதி பெரு​மாள் சித்​திரை பிரம்​மோற்​சவம் மே மாதம் நடை​பெற உள்​ளது.இதையொட்​டி, ஏப்​.30-ம் தேதி அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் விழா நடக்​கிறது. மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்​சவம் தொடங்​கு​கிறது. அன்று இரவு 7.45 மணி அளவில் புன்னை வாக​னத்​தில் சுவாமி வீதிஉலா நடை​பெறும்.
மே 2-ம் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாக​னம், இரவு 7.45 மணிக்கு சிம்ம வாக​னத்​தில் உற்​சவர் தெள்​ளிய சிங்​கர் எழுந்​தருள்​கிறார். பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான கருட சேவை மே 3-ம் தேதி நடை​பெறும்.
அன்று அதி​காலை 5 மணிக்கு கோபுர வாசல் தரிசன​மும், இரவு அம்ச வாக​னப் புறப்​பாடும் நடக்​கிறது. 4-ம் தேதி சூரியப் பிரபை வாக​னம், 5-ம் தேதி காலை பல்​லக்​கில் நாச்​சி​யார் திருக்​கோல​மும், இரவு அனு​மந்த வாக​னப் புறப்​பாடும் நடை​பெறுகிறது.
6-ம் தேதி அதி​காலை சூர்​ணாபிஷேகம், அதைத் தொடர்ந்​து, ஆனந்த வாக​னம், இரவு யானை வாக​னப் புறப்​பாடு நடை​பெறுகிறது. பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேர்த் திரு​விழா 7-ம் தேதி நடை​பெறுகிறது.
அதி​காலை 3.30 மணி முதல் 4.30 மணிக்​குள் உற்​சவர் தேரில் எழுந்​தருள்​கிறார். காலை 7 மணிக்கு பக்​தர்​கள் வடம் பிடிக்க, தேரோட்​டம் தொடங்​கு​கிறது. இரவு 9 மணிக்கு தோட்​டத் திரு​மஞ்​சனம் நடக்​கிறது.