அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா

மாஸ்கோ: நவ. 19: ‘நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது உலகப்போருக்கு வழி வகுக்கும்’ என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற நவீன ரக ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தொலைதுார இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது, உலகப்போருக்கு வழி வகுக்கும். ரஷ்யாவிற்கு எதிரான விரோத போக்கில் அமெரிக்கா செயல்படுகிறது. ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் பொறுப்பற்ற, ஆபத்தான முடிவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.