ஆப்கானிஸ்தானிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி

இஸ்லாமாபாத், ஜூன் 28- பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கெஞ்சியுள்ளார். இதுபற்றி அவர், நம் நாட்டின் சகோதர இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் நட்புறவை விரும்புகிறது. இதனால் ஆப்கானிஸ்தான், இந்தியாவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதக் குழுக்களான ஃபிட்னா அல்-இந்துஸ்தான் மற்றும் ஃபிட்னா அல்-கவாரிஜ் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று மண்டியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் நாடு ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமான தளங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நிலைக்குலைந்த பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது. பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி நம் நாட்டை தொடர்பு கொண்டு மோதலை நிறுத்துங்கள். எங்களால் தாங்க முடியவில்லை. நாங்களும் தாக்க மாட்டோம் எனக்கூறி கெஞ்சினார். இதையடுத்து நம் நாடு மோதலை நிறுத்துவதாக அறிவித்தது. இதன்மூலம் கடந்த மே 7 ம் தேதி தொடங்கிய மோதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. மோதலில தோற்றாலும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பாகிஸ்தான் வெற்றி வெற்றி என்று கூவி வருகிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டுக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது பாகிஸ்தான். அந்த வரிசையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அசீம் முனீர் நம் நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுக்கான 52வது காமன் டிரெய்னிங் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அசீம் முனீர் பங்கேற்று பேசினார். அப்போது நம் நாட்டின் மீது வழக்கம்போல் விஷத்தை கக்கினார். ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக நம் நாட்டிடம் மண்டியிட்டதை மறந்து அவர் வாய்ச்சவடால் விட்டார்.