
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2025-ம் ஆண்டு எங்களுக்கு எளிதான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு மற்றும் பின்பு என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் தற்போது சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. மேற்கு வங்க மக்கள் ஜம்மு காஷ்மீருக்கு ஆதரவாக உள்ளனர். இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவு நம்பிக்கை மற்றும் பாசத்தின் அடிப்படையிலானது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இதனை சமீபத்தில் பஹல்காமில் இருந்து திரும்பிய பயணிகள் மூலம் நீங்கள் அறியலாம். காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனால் நேரடி விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது.