கனவுகள் கலைந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள்

அகமதாபாத்: ஜூன் 14-
அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன.
குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மட்​டுமே உயிர்​பிழைத்​தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவு​கள் கலைந்து அவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீள முடி​யாத சோகத்​துக்​குச் சென்​றுள்​ளனர். விபத்​தில் ராஜஸ்​தானைச் சேர்ந்த 10 பேர் இறந்​தனர்.
அதில் 5 பேர் ஒரே குடும்​பத்தை சேர்ந்​தவர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது.
தொழில் ரீதி​யாக லண்​ட​னுக்கு குடியேற சென்ற மருத்​து​வர்​களின் குடும்​பம் இந்த விபத்​தில் உயி​ரிழந்​துள்​ளது பலருக்கு கண்​ணீரை வரவழைத்​துள்​ளது. டாக்​டர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவி டாக்​டர் கோனி வியாஸ் ஆகியோர் தங்​கள் 3 குழந்​தைகளான மிரா​யா, நகுல், பிரத்​யுத் ஆகியோ​ருடன் புதிய வாழ்க்​கை​யைத் தொடங்​கு​வதற்​காக லண்​ட​னுக்​குப் பயணம் செய்​தனர்.
இதில் பிரத்​யுத்​தும், நகுலும் 5 வயதே​யான இரட்​டையர்​கள். மிரா​யா​வுக்கு 8 வயதாகிறது.
அவர்​கள் தொழில்​முறை முன்​னேற்​றத்​துக்​காக​வும், தங்​கள் குழந்​தைகளின் எதிர்​காலத்​துக்​காக​வும் இந்த முடிவை எடுத்​திருந்​தனர். ஆனால் நடந்து முடிந்த கோர விபத்​தில் டாக்​டர் பிரதீக் ஜோஷி குடும்​பத்​தார் அனை​வரும் இறந்​தது பலரை சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது.
விமானம் புறப்​படு​வதற்கு முன்பு கோனி வியாஸ், பிரதீக் தங்​களது குழந்​தைகளு​டன் செல்பி எடுத்​துக்​கொண்டு அதை சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டுள்​ளனர். ஆனால், அதுவே அவர்​களது கடைசி புகைப்​பட​மாகி விட்​டது.