கர்நாடகத்தில் மாரடைப்பு அதிகரிப்பு

பெங்களூரு:ஜூலை 4-
கர்​நாடக மாநிலத்​தில் கடந்த ஓரிரு ஆண்​டு​களாக 30 வயதுக்​கும் குறை​வான இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழப்​பது அதி​கரித்து வரு​கிறது. மது மற்​றும் சிகரெட் பழக்​கம், இணை நோய் அறிகுறிகள் உள்​ளிட்​டவை இல்​லாத போதும், திடீர் மாரடைப்பு ஏற்​படு​வது அதி​கரித்து வரு​வ​தாக சுகா​தா​ரத்​துறை ஆய்​வு​கள் கூறுகின்​றன. ஹாசன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 23 இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழந்​துள்​ளனர். இதில் 18 பேருக்கு வீட்​டிலேயே உயிர் பிரிந்​துள்​ளது.இந்​நிலை​யில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, ‘‘இளம்​வயது மாரடைப்பு மரணங்​கள் அதி​கரிப்​பது அதிர்ச்​சி​யாக இருக்​கிறது. பெங்​களூர் மற்​றும் மைசூரு​வில் உள்ள ஜெயதேவா இதய நோய் மருத்​து​வ​மனை​களில் அவசர இதயச் சிகிச்​சைக்​காக வருபவர்​களின் எண்​ணிக்கை 20 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.மாரடைப்பு மரணங்​கள் அதி​கரிப்​ப​தற்கு என்ன காரணம் என்​பதை கண்​டறிய வேண்​டும். இதுகுறித்து முறை​யாக விசா​ரித்​து, ஆய்​வறிக்கை சமர்ப்​பிக்​கு​மாறு ஜெயதேவா இதய நோய் ஆய்வு மையத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளேன்.கரோனா தடுப்​பூசி காரண​மாக இந்த மரணங்​கள் நிகழ்ந்​த​தாக பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர் அச்​சம் தெரி​வித்​துள்​ளனர். செய்​யு​மாறு நிபுணர் குழு​வுக்கு ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தோம்.இந்த இரு அறிக்​கைகளும் இன்​னும் 10 நாட்​களுக்​குள் கிடைத்​து​விடும். பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்​‘’என்​றார்​.