கர்நாடக காங்கிரஸில் தொடரும் பரபரப்பு

பெங்களூரு: ஜூலை 3 –
கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் அமோக வெற்றி பெற்​றது.
இதைத்​தொடர்ந்து முதல்​வர் பதவியை கைப்​பற்​று​வ​தில் சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவி​யும், டி.கே. சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்பட்டது. அப்​போது இரு​வருக்கும் தலா இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கு​வ​தாக அதி​காரப் பகிர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.சித்​த​ராமையா முதல்​வ​ராகி 2 ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், டி.கே.சிவகு​மாரை முதல்​வ​ராக நியமிக்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் கூறிவரு​கின்​றனர். சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து மாற்ற வேண்​டும் என காங்​கிரஸ் மேலிடத்​துக்​கும் கடிதம் எழு​தி​யுள்​ளனர்.
இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​எல்ஏ இக்​பால் ஹுசேன், “சித்​த​ராமை​யா​வின் ஆட்​சி​யில் ஊழல், சட்​டம் ஒழுங்கு மோச​மாகி விட்​டது. அவருக்கு முன்பு போல அதி​காரம் இல்​லை. ஆட்​சியை வேறு ஒரு​வரிடம் ஒப்​படைக்க வேண்​டும்” என வெளிப்​படை​யாக விமர்சித்தார். இதற்கு அமைச்​சர் ராஜண்​ணா, “இக்​பால் ஹுசேன் எம்​எல்ஏ கூறியது உண்மைதான். மக்​கள் மாற்​றத்தை விரும்​பு​கிறார்​கள்​‘’என்றார்.கருத்து கேட்பு: இதையடுத்து கர்​நாடக அரசி​யல் நில​வரம் குறித்து காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களிடம் கருத்து கேட்க அக்​கட்​சி​யின் மேலிடம், பொதுச்​செய​லா​ளர் ரந்​தீப் சுர்​ஜே​வாலாவை பெங்​களூரு​வுக்கு அனுப்​பியது.

அவர் கடந்த 2 நாட்​களாக பெங்​களூரு​வில் 100-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களிடம் தனித்​தனி​யாக‌ ஆலோ​சனை நடத்தினார்.
அப்​போது பெரும்​பாலானோர் சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து மாற்ற வேண்​டும். டி.கே.சிவகு​மாரை முதல்​வ​ராக நியமிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​கிறது.
இதுகுறித்து காங்​கிரஸ் எம்​எல்ஏ இக்​பால் ஹுசேன் கூறுகை​யில், “100-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​கள் சித்​த​ராமை​யா​வுக்கு எதி​ராக மேலிடத் தலை​வரிடம் கூறியது உண்மைதான். அவரை மாற்​றா​விடில் கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சியை இழக்​கும் என நான் கூறினேன். ஓரிரு மாதங்​களில் நிச்​ச​யம் மாற்​றம் வரும்” என்​றார். இதனால்​ கர்​நாடக அரசி​யலில்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.