குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்: இபிஎஸ்

சென்னை: டிச. 16- தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார்.
அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு கூட்டம் சென்னை வானகரத்​தில் கட்சி​யின் அவைத் தலைவர் தமிழ்​மகன் உசேன் தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் கட்சி​யின் கணக்கு வழக்​குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சி​யின் பொதுச்​செய​லாளர் பழனிசாமி பேசி​ய​தாவது: கடந்த 2016 சட்டப்​பேரவை தேர்​தலில் கூட்டணி இன்றி, 234 தொகு​தி​களி​லும் இரட்டை இலை சின்னத்​தில் போட்​டி​யிட்டு பெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதன் பலத்தை கட்சி​யினர் தெரிந்​து​ கொள்ள வேண்​டும்.
சட்டப்​பேரவை கூட்​டத்தை ஆண்டுக்கு 100 நாட்கள் கூட்டு​வோம் என வாக்​குறுதி அளித்து​விட்டு, கடந்த 4 ஆண்டு​களில் வெறும் 113 நாட்கள் மட்டுமே கூட்​டி​யுள்​ளனர். மழைக்கால கூட்​டத்​தொடரை 2 நாட்கள் மட்டுமே நடத்​தினர். அதில் எதிர்க்​கட்சி தலைவரான எனக்கு 10 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்​பளித்​தனர். நான் சட்டப்​பேர​வை​யில் பேசும்​போதெல்​லாம் ஒளிபரப்பை துண்​டிக்​கின்​றனர். நான் சட்டப்​பேர​வை​யில் பேசுவதை ஒளிபரப்பி இருந்​தால், திமுக ஆட்சி இருந்​திருக்​காது. ஆளும் திமுக அரசுக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்து​விட்​டது.
தமிழகத்​தில் 2026 தேர்​தலுக்கு இன்னும் 14 மாதங்கள் உள்ளன. அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர் மற்றும் இளம்​பெண்கள் பாசறைக்கு 30 வயதுக்கு உட்பட்​டோரை அதிக அளவில் சேர்க்க வேண்​டும். திமுகவை மக்கள் புறக்​கணித்து​விட்​டார்​கள். மக்களை பார்க்க திமுக​வினர் அஞ்சுகின்​றனர். இதை நாம் சாதகமாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.
வரும் ஜனவரி மாத இறுதி​யில் 234 தொகு​தி​களி​லும் சூறாவளி சுற்றுப்​பயணம் மேற்​கொண்டு, இந்த ஆட்சி​யின் அவலங்களை மக்களிடம் தெரிவிக்க இருக்​கிறேன். 2026 தேர்​தலில் மக்கள் விரோத ஆட்சி அகற்​றப்​படும். வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவு​கட்​டப்​படும். அந்த தேர்​தலில் மக்கள் விரும்​பும் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.