சிறுமி தற்கொலை

சிக்கமகளூர், ஜூன் 25 –
கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம்
தரிகேரின் லிங்கடஹள்ளி கிராமத்தில்,சீருடை அணியாமல் சென்றாள் ஆசிரியர்கள் திட்டுவார்கள் மிரட்டுவார்கள் என்று பயந்து சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் நிவேதிதா (13).பள்ளி ஆசிரியர்கள் சீருடையை வழங்கியிருந்தனர். ஜூன் 23 அன்று, ஆசிரியர்கள் மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
பெற்றோர் சீருடையை தைக்க தையல்காரரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சீருடை தயாராக இல்லை. சீருடை அணியவில்லை என்றால் ஆசிரியர் தன்னை அடிப்பார் என்று பயந்து, ஒரு பெண் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது, தரிகேர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.