சென்னை: 5 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை: மே 24-
விமான நிலையத்தில் 2 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6, பிற்பகல் 2.30-க்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானங்கள் புனேவிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.45க்கும், மாலை 6.30க்கும் சென்னைக்கு வரும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.