ஜார்கண்ட் – இந்தியா கூட்டணி அமோக வெற்றி

ராஞ்சி: நவ.23- ஜார்கண்ட்டில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டில் நிலவியது. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி பாஜகவுக்கு ஷாக் கொடுத்து முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 81 தொகுதிகளில் 51 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தான் என்கிற போது அதையும் தாண்டி 51 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தபால் வாக்குகளில் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தற்போதைய நிலவரம் சொல்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியா கூட்டணி ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கும்.
1 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும், 2 ஆம் கட்டமாக 20 ஆம் தேதி 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றது. அதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில் தொடக்கம் முதலே இரு கூட்டணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. தற்போது நிலவரப்படி மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதில் பாஜக மட்டும் 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்தியா கூட்டணியில், ஜேஎம்எம் 30 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தேவை என்கிற நிலையில், இந்தியா கூட்டணி 51 தொகுதிகளில் தற்போது முன்னிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்து கொண்டாட தயாராகி வருகிறார்கள். எனினும் 4 முதல் 7 தொகுதிகளில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. எப்படி இருந்தாலும் இன்று பிற்பகலுக்குள் கிட்டத்தட்ட முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்டில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 41 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். தற்போது ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஜார்க்கண்டை பொறுத்தவரை தற்போது முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். ஆட்சியை தக்க வைக்க ஹேமந்த் சோரன் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளும், ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக கூட்டணியும் வியூகம் வகுத்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் எனக் கூறியுள்ளன. இதனால், பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மை பலத்துடன் இந்தியா கூட்டணியே முன்னிலையில் உள்ளது.