டிரம்ப் கோபம்பாகிஸ்தானுக்கு பறந்த எச்சரிக்கை

நியூயார்க், ஜூன் 27- அமெரிக்காவை குறிவைத்து அணுஆயுதத்தை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாகிஸ்தான் ரகசியமாக தயாரித்து வருகிறது. இதற்கு சீனா உதவி செய்யும் நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை கண்டுபிடித்து அதுபற்றி டொனால்ட் டிரம்ப்பிடம் அறிக்கையாக அளித்துள்ளது. இதனால் கண்சிவந்துள்ள டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு கடும் வார்னிங்கை செய்துள்ளார். பாகிஸ்தான் VS அமெரிக்கா.. ஒரு காலத்தில் இருநாடுகளும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகள் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக ஜோபைடன் இருந்த நான்காண்டு காலத்தில் இருநாடுகள் இடையேயான உறவில் மோசமானது. அதோடு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தபோது அவர் அமெரிக்காவை நேரடியாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் சதியில் தான் ஆட்சியை பறிகொடுத்ததாக புகார் தெரிவித்தார். இதனால் அமெரிக்கா – பாகிஸ்தான் விரிசல் மோசமானது. ஆனால் இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்கா – பாகிஸ்தான் உறவு மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு செல்கிறது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது டொனால்ட் டிரம்ப் மோதலை கைவிட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினர். அதோடு மோதலை கைவிட்டால் இருநாடுகளும் இணைந்து வர்த்தகம் செய்யலாம் என்ற ஆஃபரை வழங்கினார். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு கூட வாஷிங்டனில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் மதிய விருந்து அளித்தார். பூட்டிய அறையில் இருவரும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் விமானதளம், ராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதை செய்தால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வதாகவும், வர்த்தக உறவை வலுப்படுத்துவதாக டிரம்ப் கூறினார். இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானின் பெரிய சதியை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது.