நிகிதா குடும்பத்தினர் மீது போலீசில் புகார்

மதுரை: ஜூலை 4-
மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று பலரும் புகார் அளித்​தனர்.
கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள கல்​லூரி​யில் பேராசிரியை​யாகப் பணிபுரி​கிறார். நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள்,
தாயார் சிவ​காமி அம்​மாள், சகோ​தரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதே​வி, உறவினர் பகத்​சிங் ஆகியோர் அரசு வேலை வாங்​கித்தரு​வ​தாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்​திருப்​ப​தாக ஏற்​கெனவே பல வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.
2010-ல் நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள் துணை ஆட்​சி​ய​ராகப் பணி​யாற்​றிய​போது, அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி ரூ.16 லட்​சம் மோசடி செய்​த​தாக, நிகிதா குடும்​பத்​தினர் மீது வழக்கு உள்​ளது. மதுரை செக்​கானூரணி​யைச் சேர்ந்த செல்​வத்​திடம் ரூ.25 லட்​சம், ஆலம்​பட்​டியைச் சேர்ந்த முத்​துக்​கொடி,
முரு​கேசன் ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்​சம் பெற்று மோசடி செய்​த​தாக​வும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.மேலும், மொக்​க​மாயன், மணிமேகலை ஆகியோரிட​மும் பணம் பெற்​று, நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மோசடி செய்​த​தாக புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆலம்​பட்​டி​யில் உள்ள ஜெயபெரு​மாளுக்கு சொந்​த​மான வீட்டை தனி​யார் கல்​லூரிமேலா​ளர்
பாசில் மன்​சிங் என்​பவரிடம் விற்​ற​தி​லும் புகார் உள்​ளது. நிகிதா குடும்​பத்​தின​ரால் பாதிக்​கப்​பட்ட பாசில் மன்​சிங், முத்​துக்​கொடி, முரு​கேசன், தெய்​வம், வினோத்​கு​மார் உள்​ளிட்​டோர் திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று மீண்​டும் புகார் மனு அளித்​தனர்.