பாஜவின் கொள்கைகள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ஜாம்ஷெட்பூர், நவ. 11- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள். நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பை காக்க காங்கிரஸ் விரும்புகிறது.
தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் மோடி உதவுகிறார். நாங்கள் மோடி அரசை தோற்கடித்து, நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.