பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்,ஜூன் 27- சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பிரேசில் அரசு விருந்து அழைப்பு காரணமாக சீன அதிபர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
2013-ல் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த உயர்மட்ட வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) பல தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.