மீண்டும் நிபா வைரஸ் – தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திருவனந்தபுரம்: ஜூலை 5-
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வைரஸ் தொடர்பாக மலப்​புரம், பாலக்​காடு, கோழிக்​கோடு ஆகிய 3 மாவட்​டங்​களுக்கு சுகா​தார அதி​காரி​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். மேலும் வேறு யாருக்​கேனும் இந்த அறிகுறி உள்​ளதா என கண்​காணிக்​க​ ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 26 சிறப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.
மாநில சுகா​தார அமைச்​சர் வீணா ஜார்ஜ் கூறுகை​யில், “நிபா வைரஸ் பரவலை தடுக்க என்​னென்ன நடவடிக்​கைகள் எடுக்க வேண்​டுமோ அவற்றை பலப்​படுத்​தி​யுள்​ளோம். நோயாளி​களு​டன் தொடர்​பில் இருந்​தவர்​களை அடை​யாளம் காண காவல்​துறை​யின் உதவியை நாடி​யுள்​ளோம். மக்​களுக்கு உதவ ஹெல்ப் லைன்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சமீபத்​திய வாரங்​களில் இயற்​கைக்கு மாறான மரணம் ஏற்​பட்​டுள்​ளதா என ஆய்வு செய்ய உத்​தர​விட்​டுள்​ளோம்​” என்​றார்​.