ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் கமல்

சென்னை: மே 28-
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணி சார்பில் 4 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தி.மு.க. வேட்பாளர்களாக பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,எஸ்.ஆர்.சிவலிங்கம் ,ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்) ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
தற்போது உள்ள எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆளும் திமுக கூட்டணிக்கு 159 வாக்குகள் இருப்பதால், 4 இடங்கள் உறுதியாக கிடைக்கும். திமுக மூன்று இடங்களில் போட்டியிடவுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி அரசுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் வில்சனுக்கு
மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.எம்.அப்துல்லா, சண்முகம் ஆகியோருக்கு பதிலாக எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது என திமுக ஒப்பந்தம் செய்தது.
அதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அந்த இடத்திற்கு போட்டியிட உள்ளார். என்பதை குறிப்பிடத்தக்கது
கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் நீதி மையக் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்