ரெயிலில் இருந்து விழுந்து 6 பேர் பலி

மும்பை:, ஜூன் 9- தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் பயணிகள் விழுந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக, தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பயணிகள் உயிரிழந்த சம்பவத்தால் உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் இன்று காலை கடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நிற்க இடமில்லாமல் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ரயிலின் உள்ளே செல்ல முடியாத பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர். உள்ளே செல்ல முடியாத பயணிகள் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர்
அதிக கூட்டம் காரணமாக பயணிகள் கதவுகளைப் பிடித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தானேவின் மும்ப்ரா ரயில் நிலையத்தில் சிஎஸ்எம்டி நோக்கி பயணித்த சில பயணிகள் ரயிலில் இருந்து விழுந்து இறந்தனர். ரயிலில் அதிக கூட்டம் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.”
ரயில் தண்டவாளங்களின் நிலை குறித்து மும்பை ரயில் சுற்றுலா சங்கம் கவலை தெரிவித்துள்ளது. “மரணப் பாதை” என்று பரவலாகக் கருதப்படும் திவா மற்றும் கல்வா இடையேயான கொடிய பகுதி குறித்து சங்கம் தொடர்ந்து எச்ச எச்சரிக்கை செய்து வருவதாக ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பொது மேலாளர் மற்றும் ரயில்வே வாரியத்திற்கு பலமுறை எச்சரிக்கைகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் அளித்த போதிலும், எந்தவொரு நிலையான தீர்வும் செயல்படுத்தப்படவில்லை என்று கோட்ட ரயில்வே மேலாளர் புகார் கூறினார்.
சம்பவம் குறித்த விசாரணை:
மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் ரயிலில் இருந்து விழுந்ததை அறிந்ததும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.