பெல்லாரி, நவ.15-
பெல்லாரி மாவட்டத்தின் சிரகுப்பா தாலுக்காவின் தெக்கலகோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒரு வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் (23) கலாம் சாப் (19) இறந்தார், காயமடைந்த ஷேக் ஜோசிம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தெக்கலக்கோட்டில் இருந்து சிறுகுப்பா நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இந்த கோர விபத்து நடந்துள்ளதுவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.