அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம்

பெங்களூரு, நவ. 15: பன்னர்கட்டா சாலை, எஸ்என்என் ராஜ் செரினிட்டி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
வீடுகளுக்குள் நுழையும் குரங்குகள் புறா வலைகளை கிழித்துக் கொண்டும், பால்கனிகளின் சறுக்கு கதவுகளை திறந்து கொண்டும் வருவதால், குடியிருப்புவாசிகளுக்கு தினமும் சவாலாக உள்ளது. பின்னர் அவர்கள் பால் விநியோகம் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளைத் திறப்பது, முட்டைகள் மற்றும் பிற உணவுப் பொருட்களைக் எடுத்துச் செல்லவது போன்றவற்றைச் செய்கின்றன‌. ஆனால் மொபைல் போன்கள் மீதான அவைகளின் ஈர்ப்பால், அவற்றை எடுத்துச் செல்லும்போது குடியிருப்பாளர்களிடையே மேலும் அமைதியின்மையைக் கிளப்பியுள்ளது. குரங்கு ஒன்று 10வது மாடியில் இருந்து ஐபோனை கீழே போட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிபின், இது குறித்து கூறியது, “குரங்குகள் மொபைல் போன்களால் ஈர்க்கப்படுகின்றன‌. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைபேசிகளை எடுக்கின்றன. தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போன்களை எடுத்துச் செல்கின்றன”. குடியிருப்புவாசிகளின் கூற்றுப்படி, கடந்த இரண்டு மாதங்களாக, குரங்குகள் மிகவும் ஆக்ரோஷமாக மாறியுள்ளன. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. குரங்குகளின் பல்வேறு குறும்புகளை விவரித்த மற்றொரு குடியிருப்பாளரான வினீத், “வாரத்திற்கு ஒருமுறை குரங்குகள் வரும். ஆனால் இப்போது அவை தினமும் வருகின்றன” என்றார். குரங்குகள் அடிக்கடி குப்பை சேகரிப்புக்கு இடையூறு விளைவிப்பதாகவும், வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு மாலையும் குப்பைகளை அகற்றுவதற்கு முன்பு குப்பைகளை சிதறடிப்பதாகவும் அவர் கூறினார்.