அரசு சேவை எளிதாக சென்றடைய புதிய திட்டம்

சென்னை: மே 29 – தமிழ்நாடு அரசின் சேவைகள் எளிதாக சென்றடைய புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பிலும், பொதுப்பணித் துறை சார்பிலும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பிலும், மனிதவள மேலாண்மைத் துறை சார்பிலும், இந்த நலத்திட்டங்களை இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைக்கிறார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (29.05.2025) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.. முக்கிய திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 36.24 கோடி ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 102 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 60 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பேரூராட்சிகள் சார்பில் 77.07 கோடி ரூபாய் செலவில் 14 முடிவுற்றப் பணிகள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார் முதலமைச்சர். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 565.63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 147 புதிய திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 91 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய குடிநீர் திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 27.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகள், பேரூராட்சிகள் சார்பில் 12.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகள் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.