ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா?

சிட்னி, அக். 25- இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி சிட்​னி​யில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்​துள்​ளது. மழை​யால் பாதிக்​கப்​பட்ட பெர்த் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த இந்​திய அணி, அடிலெய் டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியை சந்​தித்​தது. இந்​திய அணி தொடரை இழந்​து​விட்ட நிலை​யில் கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி சிட்னி நகரில் இன்று நடை​பெறுகிறது. இதில் ஆறு​தல் வெற்றி பெற இந்​திய அணி முயற்​சிக்​கக்​கூடும். முதல் போட்​டி​யில் சிறப்​பாக செயல்பட தவறிய சீனியர் பேட்​ஸ்​மே​னான ரோஹித் சர்மா 2-வது போட்​டி​யில் 97 பந்​துகளில், 73 ரன்​கள் சேர்த்து ஆறு​தல் அளித்​தார். ஆனால் மற்​றொரு நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலி தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக ரன் ஏதும் எடுக்​காமல் ஏமாற்​றம் அளித்​தார். இவர்​கள் இரு​வருக்​குமே இது கடைசி ஆஸ்​திரேலிய சுற்​றுப்​பயண​மாக இருக்​கக்​கூடும். இதனால் இரு​வரும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். ஷுப்​மன் கில்​லும் பேட்​டிங்​கில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டிய நிலை​யில் உள்​ளார். அதேவேளை​யில் கடந்த ஆட்​டத்​தில் 61 ரன்​கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். மேலும் இரு போட்​டி​யிலும் பேட்​டிங், பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்ட அக்​சர் படேலும் மீண்​டும் ஒரு சிறந்த பங்​களிப்பை வழங்​கக்​கூடும். சிட்னி ஆடு​களம் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக இருக்​கும் என்பதால் குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​படக்​கூடும். அவர், களமிறங்​கும் பட்​சத்​தில் நிதிஷ் குமார் ரெட்டி அல்​லது வாஷிங்​டன் சுந்​தர் நீக்​கப்​படக்​கூடும். இதே​போன்று வேகப்​பந்து வீச்​சில் ஹர்​ஷித் ராணா நீக்​கப்பட்டு பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட வாய்ப்பு உள்​ளது. மிட்​செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்​திரேலிய அணி ஒரு​நாள் போட்​டித் தொடரை முழு​மை​யாக 3-0 என கைப்​பற்​றும் முனைப்​பில் களமிறங்​கக்​கூடும். இருதரப்பு ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் அந்த அணி இந்​தி​யாவை முழு​மை​யாக அனைத்து ஆட்​டங்​களி​லும் இது​வரை வென்​றது கிடை​யாது. இன்​றைய ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் முதன் முறை​யாக இந்​தி​யா​வுக்கு எதி​ரான இருதரப்பு ஒரு​நாள் போட்டி தொடரை முழு​மை​யாக கைப்​பற்றி சாதனை படைக்​கும்.