
இஸ்லாமாபாத்: மே 31 –
பாகிஸ்தானின் ரெட் லைனை இந்தியா தாண்டிவிட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் விடுத்த எச்சரிக்கையில் தண்ணீர் என்பது பாகிஸ்தானின் வாழ்வாதாரம். 240 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இது. அவர்களின் உயிர் சம்பந்தப்பட்டது. அதை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்வது. பாகிஸ்தானின் அஸ்திவாரம் அதை நம்பி இருக்கிறது. பாகிஸ்தான் போட்ட சிவப்பு கோடுதான் தண்ணீர் என்பது. அந்த சிவப்பு கோட்டை இந்தியா தாண்டிவிட்டது. இந்திய மேலாதிக்கத்தை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தண்ணீர் என்பது பாகிஸ்தானின் சிவப்புக் கோடு, மேலும் 240 மில்லியன் பாகிஸ்தானியர்களின் இந்த அடிப்படை உரிமையில் எந்த சமரசத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியா தண்ணீரை ஆயுதம் போல பயன்படுத்துகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச விதிகளை, ஒப்பந்தங்களை மீறி செயல்படுகிறது. இந்தியா இந்த பிராந்தியத்தின் அமைதியை குலைக்கும் விதமாக செயல்படுகிறது என்று அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையான எச்சரிக்கை முன்னதாக எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.
அவரின் இந்த ஆணவமான பேச்சு, இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு அலைகளை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி பேசிய இந்த கருத்துக்கள் தீவிரவாதி ஹபீஸ் சயீத் பேசிய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றன. ஹபீஸ் சயீத் இதேபோல் இந்தியா தண்ணீர் தரவில்லை என்றால்.. நாங்கள் பாதிக்க மாட்டோம். இந்தியாதான் அதன் விளைவுகளை சந்திக்கும், கடுமையான விலைகளை சந்திக்கும்.. இந்தியர்கள் உயிரை விட வேண்டி இருக்கும் என்று கூறி இருந்தார். அதே கருத்தை இப்போது அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அங்கே பாகிஸ்தான் ராணுவம் – தீவிரவாத அமைப்பு இரண்டும் ஒரே மரத்தில் செல்லும் இரண்டு கிளைகள், இரண்டிற்கும் வேறுபாடு எல்லாம் இல்லை என்று சொல்வது வழக்கம் . அதை நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு தீவிரவாதி சொன்ன அதே கருத்தை சொல்லி இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் எல்லாம் இதை கண்டும் காணாமல் உள்ளது.
campaign=News-Cards